என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடுமுடி ஊழியர் பலி"
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் நால்ரோடு அடுத்த பஞ்ச லிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55).
இவர் மன்னாதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசுந்தரி (50). இவர்களுக்கு பாலமுருகன் (30), வெற்றிவேல் (28), கார்த்திகேயன் (26), ஹரிஷ்குமார் (24) என 4 மகன்கள் உள்ளனர்.இவர்கள் வெவ்வேறு செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேந்திரன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரவில்லையாம். அவரது மகன்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் ராஜேந்திரன் நஞ்சப்ப கவுண்டன் புதூர் கொளந்தான் தோட்டம் என்ற இடத்தில் குப்புற விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது இடது கன்னம் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டு இறந்தது. எனவே இவர் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து மலையம் பாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரனின் மகன் வெற்றிவேல் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்