search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ரெயிலில் பாம்பு"

    • பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    ஜபல்பூர்- மும்பை கரிப்ரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கசாரா ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் உள்ள G-17 பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து பயணிகள் பீதியில் உறைந்தனர். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கசாரா வழித்தடத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


    Snake On A Train! "Gareeb rath mein ameer kahan se aa gaya ye?" (How has this rich one come to Gareeb Rath (name of train). The sense of humour of Indians is legendary?. Jokes apart, a snake found in Jabalpur-Mumbai Garib Rath Express. #snake #snakeVideo pic.twitter.com/xLP9T2A3cD



    மும்பையில் இயங்கிவரும் புறநகர் ரெயிலில் திடீரென பாம்பு புகுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    மும்பை :

    மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் புறநகர் ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் உள்ள கைப்பிடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த ரெயில் நிலையமான தானேயில் ரெயில் நின்றதும் பயணிகள்  அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து பாம்பு இருந்த ரயில் பெட்டிக்கு விரைந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ரெயிலில் இருந்து பாம்பை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய ரெயில்வே செய்திதொடர்பாளர் சுனில் உதாசி, ’வழக்கமான இரண்டு பயணங்களை முடித்த பிறகு ரெயிலின் மூன்றாவது பயணத்தில் பாம்பு புகுந்துள்ளது. பொதுமக்கள் கூட்டமாக இருந்தும் கைப்பிடி அமைந்துள்ள உயரமான இடத்தில் திடீர் என பாம்பு இருந்துள்ளது.

    இது சாதாரண நிகழ்வாக தெரியவில்லை, யாரோ பாம்பை வேண்டும் என்றே ரெயிலில் விட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தார்.
    ×