search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ நாட்டு பெண்களிடம் சில்மிஷம்"

    ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த மெக்சிகோவைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஓட்டல் மேலாளர் ரிஷி ராஜ் சிங் (40), மெக்சிகோ நாட்டு பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளார். அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதுதொடர்பாக மெக்சிகோ நாட்டு பெண்கள் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ரிஷிராஜ் சிங் அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 
    ×