search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் ராயல்ஸ்"

    • 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
    • இரண்டு சீசன்களில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிரவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதால் ஐ.பி.எல். அணியில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவியும் முடிவடைந்தது.

    இதனைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகள் அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதற்கிடையே ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத செக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் டிராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் ஆஃபரை நிராகரித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 சீசனில் விளையாடியுள்ளார். வார்னே ஓய்வுக்குப்பின் இரண்டு சீசன்களில் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

    ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    • இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.
    • டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • குமார சங்ககாரா இங்கிலாந்து ஒயிட்-பால் அணிக்கு பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு.
    • அதனால் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளதாக தகவல்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
    • இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களை சேர்த்தார்.
    • ஐதராபாத் சார்பில் ஷபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல துக்கம் கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேட்மோர் 10 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன சஞ்சு சாம்சனும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரியான் பராக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரனக்ளை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மறுபுறம் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    ஐதராபாத் சார்பில் ஷாபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த வகையில், மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. 2024 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 

    • ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.

    அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

    முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • கிளாசன் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
    • ராஜஸ்தான் அணியின் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதன் காரணமாக முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ஐ.பி.எல். 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
    • இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அந்த வகையில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை வரவேற்கும் விதமாகவும், ராஜஸ்தான் அணி கேப்டர் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த என்பதாலும் தமிழ்நாடு - கேரள மக்களை இணைக்கும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலுடன் எடிட் செய்து அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டது. இதை நெட்டிசன்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை Tag செய்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

    • அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார்.
    • ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படித்தார் 34 ரன்களும் மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோஹ்லர் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டினர். டாம் கோஹ்லர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய சாம்சன் சிக்சர் அடிக்க தேவையில்லாமல் இறங்கி வந்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜூரல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து ரியான் பராக் - ஹெட்மெயர் ஜோடி அணியின் வெற்றிக்காக போராடினர். கடைசி கட்டத்தில் ரியான் பராக் 36 ரன்னிலும் ஹெட்மெயர் 26 ரன்னிலும் ஓரே ஓவரில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரம் கூட கொண்டாட முடியவில்லை. 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய பவல், கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • குவாலிபையர் 2 போட்டி மே 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
    • இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது. அந்த வகையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மே 24 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள வேண்டும்.

    குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    ×