என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமநாதபுரம் வீடு கொள்ளை"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 56), விழுதூர் இயற்கை எரிவாயு பிளாண்டில் என்ஜினீயராக உள்ளார்.
கடந்த 17-ந் தேதி புருசோத்தமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். அவரது கார் டிரைவர் தினமும் வந்து கார்டனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் செல்வார்.
நேற்று முன்தினம் வந்த கார் டிரைவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சென்னையில் உள்ள புருசோத்தமனுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள், ஒரு வைரத்தோடு, 2½ கிலோ சில்வர் பொருட்கள், 3 கைகடிகாரங்கள், எல்.இ.டி. டி.வி. என மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கேணிக்கரை போலீசில் புருசோத்தமன் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பொருட்கள் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Robberycase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்