என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "20 Over World Cup"
- கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
- நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.
கயானா:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.
2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.
2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.
மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.
- இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
- வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
- நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள்.
- கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். உங்களது பார்மை மறந்து விடுவார்கள். கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள்.
எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் விளையாட நான் விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப் பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியில் இடம் பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கோலி, ரோகித் 20 ஓவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
துபாய்:
9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்