search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "26 kg bag of rice"

    • 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க திட்டம்
    • கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

    வேலூர்:

    மத்திய அரசின் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க வேலூரில் உள்ள கடைகளில் 26 கிலோ அரிசி மூட்டை கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    மத்திய அரசு அத்தியாவசிய உணவுப்பொருட்களுக் கான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தது. இதனை கண்டித்தும், வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 16-ந் தேதி மொத்த அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை கடை வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மத்திய அரசு 25 கிலோவிற்கு மேல் பண்டல்கள் (பேக்கிங்) செய்யப்பட்ட உணவுப்பொருட்க ளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி கிடையாது. 25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பண்டல்கள் செய்யப்பட்ட அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரிசெலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் நகரில் உள்ள அரிசி கடைகளில் 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 5 சதவீத - ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ அரிசி மூட்டையை அரிசி ஆலைகள் தயார் செய்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. எனவே பொதுமக்களின் நலன் கருதி 25 கிலோ மூட்டைக்கு பதி லாக 26 கிலோ மூட்டைக ளாக அரிசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி கடைகளுக்கு ஆரணி, பெங்களூரு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து தற்போது வரும் அரிசி மூட்டைகள் 26 கிலோவாகவே வருகிறது.

    இதனால் பொதுமக்க ளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதே சமயம் 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மூட்டைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.

    ×