search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 women"

    குமாரபாளையம் அருகே மினிலாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்டோர் நேற்று வேனில் குமாரபாளையத்தில் இருந்து புறப்பட்டனர்.

    அந்த வேன் காவடியான்காடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த மினிலாரி மீது மோதி கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் மினிலாரியின் முன்பாகம் நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அய்யம்மாள் (வயது 60), சந்திரம்மாள் (63), கற்பகம் (52), மாரியம்மாள் (40), பெருமாயி (55), வள்ளியம்மாள் (52) ஆகியோர் பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×