search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi krithigai"

    • பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி
    • திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

    திருவார் மறையின் செம்பொருள்போற்றி

    ஆறுமுகத்தெம் அரசேபோற்றி

    மாறுகொள் சூரரை வதைத்தாய்போற்றி

    இருள்கெடுத்திருன்பருள் எந்தாய்போற்றி

    உருள்பூங்கடம்பணி உறவோய்போற்றி

    ஈசற்கு இனிய சேயேபோற்றி

    மாசறு திருவடி மலரோய்போற்றி

    உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

    செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

    ஊனில் ஆவியார் உயிர்போய்போற்றி

    கானில் வள்ளியின் கணவபோற்றி

    எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

    அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

    ஏறுமயிலூர்ந்த தேகுவாய்போற்றி

    கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

    ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

    செய்ய மேனியனே தேவேபோற்றி

    ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

    பருவம் முதிராப் பண்பேபோற்றி

    ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

    மாமுதல் தடிந்த மறவபோற்றி

    ஒளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

    தெய்வம் எல்லாந்தொழும் செய்யாபோற்றி

    எக்கும் வேலுடை இறைவாபோற்றி

    வெக்குதல் அற்றார் விளக்கேபோற்றி

    கந்தா மணமார் கடம்பாபோற்றி

    காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி

    மூப்பீறற்ற முதல்வாபோற்றி

    கிள்ளை மொழியுமை பிள்ளாய்போற்றி

    கள்ளப் புலனைக் களைவாய்போற்றி

    கீழறும் அடியர் கிழவோய்போற்றி

    குன்றும் குழைந்தோட் குமரபோற்றி

    என்றும் இளைய ஏறேபோற்றி

    கூம்புகைத் தேவர் கோவேபோற்றி

    பாம்பணி சிவனார் பாலகபோற்றி

    கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி

    அண்டினோர்க் கருளும் அங்கணபோற்றி

    கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

    வீடில் வீடருள் விமலபோற்றி

    கைவேல் கொண்ட காவல்போற்றி

    நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

    கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

    படைக்கடல் தலைவ பரனேபோற்றி

    கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

    போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

    சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

    நவ சரவணத்தில் நகர்ந்தாய்போற்றி

    அறுவுரு அமைந்தே ஆடினாய்போற்றி

    அறுமீன் பாலுண் அமரபோற்றி

    பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

    நான் முகமைச் சிறை நாட்டினாய்போற்றி

    மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி

    செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி

    அங்கண் குறிஞ்சிக்கு அரசேபோற்றி

    இறைவனுக்கரும்பொரள் இசைந்தாய்போற்றி

    மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி

    பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி

    திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி

    மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி

    குன்று தோறாடும் குழந்தாய்போற்றி

    துன்று பழமுதிர் சோலையாய்போற்றி

    திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி

    இசைபெரு வேள்வி அன்முகபோற்றி

    செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

    மங்கல மான வானவபோற்றி

    வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

    திங்களின் ஒளிரும் சீர்முகபோற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

    சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

    மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

    துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

    செவியீராறுடைச் செம்மால்போற்றி

    கவித்தொடை புனைந்தோட் கந்தாபோற்றி

    பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

    என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

    பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

    அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

    நக்கீரற் கருள் நாதாபோற்றி

    தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

    குமர குருபரற் கருளினைபோற்றி

    பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

    கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

    தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

    பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

    கோழி வெல்கோடிக்கோவேபோற்றி

    ஊழி தோறூழி உள்ளாய்போற்றி

    செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

    மெய்யெல்லாம் வெண்ணீறணிவோய்போற்றி

    மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

    வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

    சேவலும்மயிலும ¢சேர்த்தோய்போற்றி

    போர்மிகு பொருந புரநல போற்றி

    ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

    பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

    தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

    அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

    கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

    இன்பார் இளைய ஏந்தால்போற்றி

    என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

    • ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும்.
    • வளமான வாழ்க்கை அமையும்.

    ஆறுபடை வீடுகள் :

    1. திருப்பரங்குன்றம்

    2. திருச்செந்தூர்

    3. பழனி

    4. சுவாமி மலை

    5. திருத்தணி

    6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.

    ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் :

    அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார்.

    ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

    1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

    2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்

    3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்

    4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்

    5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி

    6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

    மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.

    ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும்.

    வளமான வாழ்க்கை அமையும்.

    • படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.
    • ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர்.

    கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார்.

    பார்வதி தேவியும் அதன்படியே ஆறு குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய இரண்டு திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள்.

    ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது.

    அழகே வடிவமெடுத்து "கந்தன்" என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான்.

    ஆற்றுப்படையே ஆறுபடை வீடு :

    படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.

    ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர்.

    ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன.

    நக்கீரர் "திருமுருகாற்றுப் படை" என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார்.

    அதனையட்டி ஆறுமுகனுக்கு ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர்.

    • அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.
    • அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்” என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

    சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான்.

    தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான்.

    தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன்.

    நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர்.

    சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர்.

    "தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம்.

    அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.

    அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

    அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன.

    அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.

    திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

    • தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.
    • உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.

    தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதாக புராண வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகிறோம்.

    ஆறுமுகன் அவதரித்தல் :

    உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.

    கருணையே வடிவான ஆறு திருமுகங்களையும், பன்னிரெண்டு கரங்களையும் தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர்.

    முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். "முருகு" என்னும் திருப்பெயரோடு "அன்" விகுதி சேர்த்து முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.

    அப்பேற்பட்ட முருகப் பெருமானின் அவதாரப் பெருமையையும், ஆறுபடை வீடுகளின் தலச் சிறப்பையும் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

    • கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.
    • மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

    அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே!நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும்.

    மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

    தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

    இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.

    மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

    அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு.

    ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

    • தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
    • தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர்.

    உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.

    தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.

    இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.

    "அதிருங் கழல்பணிந்து னடியேனுன்

    அபயம் புகுவதென்று நிலைகாண

    இதயந்தனிலிருந்து க்ருபையாகி

    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

    எதிரங்கொருவரின்றி நடமாடும்

    இறைவன் தனது பங்கிலுமைபாலா

    பதியெங்கிலுமிருந்து விளையாடிப்

    பலகுன்றிலும மர்ந்த பெருமானே."

    சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்

    தவமுறை தியானம் வைக்க அறியாத

    சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த

    தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!

    கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு

    கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!

    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை

    கமழுமணமார் கடப்ப மணிவோனே

    தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய

    சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு

    தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து

    தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

    அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க

    அரிய தமிழ்தானளித்த மயில்வீரா

    அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த

    அழகதிருவேரகத்தின் முருகோனே!

    • நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.
    • கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.

    முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு.

    முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை.

    கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான்.

    அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது.

    இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் "சரவணபவ" என்னும் ஆறெழுத்தே ஆகும்.

    நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

    கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.

    சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், "கார்த்திகேயன்" எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார்.

    இதைக் கந்த புராணம்,

    "கந்தன் தனை நீர் போற்றிய கடனால்

    இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!"

    என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நட்சத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார்.

    கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,

    "நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்

    தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்"

    எனவும் சொல்லுகின்றது.

    • “கொக்கு” என்றால் மாமரம் என்று பொருள்.
    • கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், “கொக்கு அறு கோ” என்று முருகனைப் போற்றியது.

    முருகனின் கையில் கொடியாக அமர்ந்த அமர்ந்த சேவல் "கொக்கு அறு கோ!" என்று கூவியது.

    மனித இனத்தை விழிப்படையச் செய்ய இன்றும் தொடர்ந்து, அதிகாலையில், "கொக்கு அறு கோ!" என்று கூவுகிறது! ஏன் அவ்வாறு கூவுகிறது?

    "கொக்கு" என்றால் மாமரம் என்று பொருள்.

    கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், "கொக்கு அறு கோ" என்று முருகனைப் போற்றியது.

    அழகனான குமரக்கடவுள், மேனி முழுவதும் கண்களாக இருந்த இந்திரனாகிய மயிலூர்தியை விடுத்து, நல்லுணர்வு பெற்று நல்லொழுக்கம் வரப் பெற்ற சூரனின் ஒரு கூறாகிய மயில் மேல் எழுந்தருளினான்!

    "மயிலே! எம்மைச் சுமந்திடுவாயாக!" என்று கூறி அம்மயிலை வானத்திலும், திக்குகளிலும், பூமியிலும் செலுத்தலானான்.

    இந்திரன் முருகனின் இடைக்கால மயிலூர்தியாக இருந்து போர்க்களத்தில் பணியாற்றினான்.

    சூரன் மயிலாக மாறியவுடன் இடைக்கால ஊர்தியை விட்டு இறங்கினான்.

    சேவலும் மயிலும் ஆகிட, விரும்பி, தவம் செய்த சூரனுக்கு பேரருள் செய்யும் பொருட்டு அவனைத் தன் ஊர்தியாக்கி அதன் மீதேறி உலகைச் சுற்றி வந்தான்.

    புதிய மயிலூர்தியில் வலம் வந்த வடிவேல் முருகனை அமரர்களும், தம்பியரும் சூழ்ந்து நின்று போற்றினர்.

    • அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.
    • இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது

    குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.

    அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.

    அடுத்து, மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம்.

    அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.

    அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

    இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது

    • கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.
    • அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.

    அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    "கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்" என்று அருள் புரிந்தார்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அடுத்த மாதம் 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29-ந்தேதி செயல்படவேணடும்.

    இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    ×