search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Admi party"

    • மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

    விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
    • மனிஷ் சிசோடியா கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    இதைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

    விசாரணையை தொடர்ந்து மனிஷ் சிசோடியாவிற்கு நிபந்தணைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி மணிஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை சார்பில் மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று முன்வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தனது கட்சியினருடன் கலந்துரையாடியதை காங்கிரஸ் மற்றம் ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இன்னும் 10 தினங்களில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

    என்றாலும் பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்யவில்லை. தொடர்ந்து தினமும் அவர் திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில் இன்று மதி யம் அவர் 1 கோடி பா. ஜனதா தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந் துரையாடல் நடத்தினார். நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் காணொலி காட்சி மூலம் மோடியுடன் பேசினார்கள்.

    உலக அளவில் இந்த காணொலி காட்சி நிகழ்ச்சி சாதனை படைப்பதாக கருதப்படுகிறது. இதுவரை எந்த நாட்டின் தலைவரும் ஒரே நேரத்தில் 1 கோடி பேருடன் கலந்துரையாடல் செய்தது இல்லை. இந்த கலந்துரையாடலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசை மக்கள் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக வளர்வோம். ஒன்றாக போரிடுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்.

    இந்தியாவை பிரிப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. ராணுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதன் பிறகு பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கியது. மாநிலம் வாரியாக பா.ஜனதா தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

    தமிழ்நாட்டில் 600 இடங்களில் பிரதமர் மோடியுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் 16 இடங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்கள்.

    விருகம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அதுபோல தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு மோடியிடம் கேள்வி கேட்டனர்.

    மோடியின் இந்த கலந்துரையாடலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    நாட்டில் போர் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் அதை கவனிக்காமல் மோடி தேர்தல் பிரசாரம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை- சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் அளவிடப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சமூக வலை தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி, ஊடகங்களிலும் பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.

    பசுமை வழிச்சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்று அவர் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஸ்வரன் காரியாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மதுரவாயல் ஆலப்பாக்கம் சீனிவாசன் நகரில் உள்ள வசீகரன் வீட்டுக்கு இன்று அதிகாலை காரியாப்பட்டி போலீசார் வந்தனர். அவர்கள் சென்னை போலீசாரின் உதவியோடு வசீகரனை கைது செய்தனர். பின்னர் அவரை காரியாப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.

    வசீகரன் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×