search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Radhika"

    • இந்தியா அணி வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 19-ந் தேதி தொடங்குகிறது.
    • டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.

    இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
    • பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.

    தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று வடபழனியில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது " தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு நிறைய சம்பளத்தை கொடுக்கின்றனர். ஆங்கில திரையுலகில் பிளான் செய்கிற விஷயங்களில் 10 பர்சண்ட் இங்கு செய்தால் நம்மளால் பல பணங்களை நாம் சேமிக்க முடியும்.

    பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கூறினேன், புகார் ஏதும் அளிக்கவில்லை. நான் புகார் அளித்திருந்தால் தான், என்னிடம் விசாரணை நடத்துவார்கள்.

    இதுபோன்ற ஒரு சமயத்தில் பெரிய பிரச்சினை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். 4 நாட்களுக்கு முன்பு எனக்கு எஸ்.ஐ.டியில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.

    படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள், அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.

    என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறேன்.

    80களில் இருந்து நான் பார்க்கிறேன், எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இருக்கிறது. ஆனால், யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தில் ஒரு வலிமையான சங்கம் அமைக்க நான் வலியுறுத்தி உள்ளேன். முன்னணி நடிகர்களின் மவுனம் தவறாக தான் தெரியும்" என்றார்.

    ×