என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adishi"
- டெல்லி கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
- ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
- கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.
இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.
இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.
- அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
- கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார். மேலும், இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
- இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்
- அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal along with proposed CM Atishi and other cabinet ministers arrive at the LG secretariateArvind Kejriwal will tender his resignation as Delhi CM pic.twitter.com/BNVrUChlgR
— ANI (@ANI) September 17, 2024
#WATCH | Delhi's proposed CM Atishi leaves from the LG Secretariat after staking claim to form the new government. pic.twitter.com/lDiecf8Stg
— ANI (@ANI) September 17, 2024
- மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர்.
- பாஜக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.
டெல்லி அரசியல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து ஜாமீனில் வந்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பொறுப்புக்கு அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் சிறையிலிருந்த சமயத்தில் அரசை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றிய அதிஷி தற்போது முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த சமயத்தில் அதிஷியின் கல்வி மற்றும் அரசியல் பின்புலம் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆக்ஸ்போர்டு பட்டதாரி
டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிர்களாக இருந்த விஜய் குமார் சிங், திரிபா வாஹி தம்பதிக்கு ஜூன் 8, 1981 ஆம் ஆண்டு பிறந்த அதிஷி, st. ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டமும் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2 முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட அதிஷி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் ஆர்கானிக் விவசாயம் மற்றும் கல்வி அமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்த 7 வருடங்களை கழித்துள்ளார்.
ஆம் ஆத்மி பிரவேசம்
கடந்த 2012 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதும் அதில் உறுப்பினராகச் சேர்ந்த அதஷி அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆம் ஆத்மி கொள்கைகளை வடிவமைப்பு குழுவில் முக்கிய பங்காற்றிய அதஷி தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்களில் மக்களுக்கு பரிட்சியமான முகமாக மாறத் தொடங்கினார்.
மார்லெனா
அதிஷியின் முழு பெயர் அதஷி மார்லெனா சிங் [ Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.
தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [ கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக போது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தார். தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.
ஆட்சியில் பங்கு
தொடர்ந்து டெல்லி கல்வி அமைச்சக ஆலோசகராகச் செயல்பட்ட அதிஷி கல்காஜி தொகுதியில் 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ஆகியோர் சட்ட சிக்கல் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்வி அமைச்சராகவும் பு பொதுப்பணித் துறை, மின்சக்தி மற்றும் சுற்றுலாத்துறை பொறுப்புகளை நிர்வகித்து வந்தார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா துணை முதல்வராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராகச் செயல்பட்ட சமயத்திலேயே டெல்லி அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்த அதிஷி பள்ளிகள் மற்றும் பாடத்திட்டத்தில் தரத்தை உயர்த்தினார். மேலும் தனது சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தினார் அதிஷி. இந்நிலையில் தற்போது முதல்வராக அதிஷியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார்
- டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
ஆம் ஆதிமி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிசி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக ரூ.25 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தன்னை விலைக்கு வாங்க முயன்றதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார். இதற்கு மறுத்தால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்துவிடுவோம் என்று பாஜக மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதிஷி ஊடகத்தின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அதிஷி ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன்1 ஆம் தேதி கெஜ்ரிவாலின் ஜாமின் முடிய உள்ள நிலையில் அவரின் ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.
- தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து.
பாரதீய ஜனதா கட்சியில் சேராவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று டெல்லி பெண் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது.
மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பா.ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிஷி கூறியதாவது:-
ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று), எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பாஜக புகார் அளித்தது. ஏப்ரல் 5-ம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிப்பரப்பின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்தது.
அதாவது, தேர்தல் கமிஷன் நோட்டீசை முதலில் ஊடகங்களில் பா.ஜ.க.வினர் போடுகிறார்கள் அதன் பிறகு எனக்கு நோட்டீஸ் வருகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதே எனது கேள்வி.
அனைத்து மத்திய அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டது கவலைக்குரிய விஷயம்.
மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூட பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்சனைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.
எம்சிசி செயல்படுத்தப்பட்ட பிறகும், மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் பா.ஜ.க.வினர் புகார் பதிவு செய்த உடனேயே 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருகிறது. நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா?
டிஎன் சேஷனின் வாரிசுகளாக இருந்து, இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவர்களின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்