search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CT 2025"

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
    • பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி முடிகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.

    ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு அணியை அனுப்பாமல் இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசத்தை பின்பற்றும் என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு சென்று சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் நடந்த ஐசிசியின் ஆண்டு கூட்டத்தில் அதிகாரிகள் பிசிபி தலைவர் மோஷின் நக்வியை சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ×