search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Catering"

    • அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
    • அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமார பாளையம் அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

    தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • இங்கிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று 3 டெஸ்டில் விளையாடுகிறது.
    • டி20 தொடரின் போது வழங்கப்பட்ட உணவு உயர் தரமாக இல்லை என்று வீரர்கள் அதிருப்தி.

    இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஏழு டி20 போட்டிகளில் விளையாடியது. இந்தத் தொடரை 4-3 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது.

    தற்போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.

    டி20 தொடரின்போது இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கிய உணவு தரமாக இல்லை எனவும், சில வீரர்களுக்கு வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் டெஸ்ட் போட்டிக்கான அணியுடன் சமையல் கலைஞரை (Chef) அனுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018 உலகக் கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 202 கால்பந்து தொடரின்போது இங்கிலாந்து கால்பந்து அணியுடன் இதுபோன்று செஃப் அனுப்பப்பட்டார்.

    தற்போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக செஃப்-ஐ அனுப்ப இருக்கிறது.

    பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் முல்தானிலும், 3-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற இருக்கிறது.

    ×