என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai Formula 4"
- நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நடைபெறுகிறது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதால் உற்சாகம். நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.
தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டகாவும் மாற்றியதற்கு முதல்வர், உதயநிதிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Excited for Chennai to host the #Formula4 Race! Thrilled to see our spirit, hospitality, and sporting excellence on display. Congratulations to @mkstalin & @Udhaystalin for transforming Tamil Nadu into the Sports Capital of India and the Detroit of the East.
— Kamal Haasan (@ikamalhaasan) August 30, 2024
தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், " சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது இந்தியாவிற்கே உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நாட்டில் முதன்முறையாக பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்தை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்" என்றார்.
- முதலில் 9-ந்தேதி மற்றும 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- பின்னர் டிசம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கார் பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தீவுத்திடலில் இருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரவு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் போட்டி வருகிற 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடலில் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்