search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative"

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    • திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது.
    • இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது. மறு தேதி அறிவிக்கும் வரை ஆலை மூடப்பட்டுள்ளது.

    திருபுவனையில் இயங்கிவரும் புதுவை கூட்டுறவு நூற்பாலை ஷிப்ட்டில் இருந்து தொழிலாளருக்கு லே-ஆப் விடப்பட்டுள்ளது.

    நூற்பாலை உற்பத்திக்கு தேவையான பஞ்சு கொள்முதல் தாமதமாக கிடைப்பதால் இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

    ஆலைக்கு வர வேண்டிய பஞ்சு தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் கிடைப்பது தாமதமாகி உள்ளதால் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காமல் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு வரத்து வர உள்ளதாகவும், அதற்குப்பின் ஆலை வழக்கம்போல் இயங்கும் என்று தொழிலாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    புதுவை மாநில அளவில் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற பஞ்சாலைகள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது திருபுவனை கூட்டுறவு நூற்பாலை மூலப்பொருள்கள் வராததால் உற்பத்தி பாதிப்பு என்ற காரணத்தைக் காட்டி, தற்போது ஆலையின் நிர்வாகம் ஆலையை மூடியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
    • மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.

    சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரூ.80 லட்சம் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது.
    • சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.

    அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுசங்களின் கூடுதல் பதிவாளர் குமார் ஆய்வு செய்தார் ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபடும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் அரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் பின்பு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து கிராமபு ரத்தில் 4 கோடி ருபாய் டெபாசிட் வைத்து சிறப்பாக பொதுமக்களக்கு சேவையாற்றும் மருதூர் தெற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகளைபாராட்டினர்

    பின்பு கடந்த ஆண்டு நவம்பர் 12ந் தேதிஇந்த வங்கியில் நடைபெற்ற வங்கி கொள்ள முயற்சி குறித்து கேட்டறிந்தார் பின்பு தற்போது வங்கிக்குகூடுதல் பாதுகாப்பு காவலர் அறை ஆகியவற்றை பார்வை யிட்டார் ஆய்வின்ன்போது மண்டல இணை பதிவாளார் அருள் அரசு, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகபிரியா கூட்டுறவு சங்க தலைவர

    சோமசுந்தரம் இயக்குனர் உதயம் முருகையன் செயலாளர்கள் அசோகன்' வீரமணி உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டார் இதே போல் வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், ஆதனூர், வேதாரண்யம்-தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டர் பின்பு செய்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளர் குமார் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவிதம் வழங்கப்பட்டுவிட்டது நேற்று வரை 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டுவிடும் என்றார்

    • நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பால் உற்பத்தியாளர்கள் கறவை செய்த 11,44,775.500 லட்சம் லிட்டர் பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.4.50 வீதம் கறவை உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவர் கட்டளை அன்பு பரிசாக வழங்கினார்.

    அதன்படி மொத்தம் ரூ.51 லட்சத்து 51 ஆயிரத்து 489 ரூபாய் வழங்கப்பட்டது.

    முதல் பரிசாக பால்கட்டளையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு ரூ.75,224-ம், இரண்டாம் பரிசாக ரஸ்தாவை சேர்ந்த வேல் குமார் என்பவருக்கு ரூ.48,900, மூன்றாம் பரிசாக சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு ரூ.46,192-ம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மாரியப்பன், சங்கச் செயலாளர் வெங்கடாசலம், சிப்பந்திகள், நிர்வாகிகள் மற்றும் கறவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×