search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crocodiles"

    • கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
    • வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அன்னூர் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.

    இதனை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் குட்டையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு ஆழத்தில் பதுங்கிய முதலையை பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக குட்டையில் உள்ள தண்ணீரை 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.

    சுமார் 30 மணிநேரத்துக்கு பிறகு குட்டையில் இருந்த தண்ணீர் முழுமையாக வற்ற தொடங்கியது. அப்போது வற்றிய குட்டையின் ஆழத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முதலை பதுங்கி கிடப்பது தெரியவந்தது.


    தொடர்ந்து வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் தப்பிவிடாத அளவுக்கு கயிறுகள் மூலம் பிணைக்கப்பட்டன. தொடர்ந்து குட்டைக்குள் கிடந்த முதலையை தோளில் தூக்கியபடி வனத்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த முதலை பவானிசாகர் அணையில் ஆழமான பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை உயிருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதலையை பிடிக்க போராடிய வனத்துறையினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இங்கு 2 முதலைகள் இருப்பதாக தகவலின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அங்கு ஒரு முதலை மட்டுமே பிடிபட்டது. அந்த முதலை அணைப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது என்றனர்.

    • நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
    • முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பின்னர் மறுகால் பாய்ந்து பவானி ஆற்றை சென்றடைகிறது.

    இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் தற்போது வரை 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி உள்ளது.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் ஒரு முதலை பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால் அந்த முதலையை பிடிப்பது வனத்துறைக்கு சவால் மிகுந்த பணியாக உள்ளது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாத அளவில் வனத்துறையின்ர் வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்வையிட்டனர்.

    அப்போது நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே நீர்வழிக்குட்டையில் தண்ணீர் வற்றத்தொடங்கி உள்ளதால் அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் உடனடியாக நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது.
    • ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.

    குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி நதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலைகளையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

    விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் 10 முதலைகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    10 முதலைகளில் 2 முதலைகள் வனபகுதியில் விட்டதாகவும், 8 முதலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆற்றின் நீர்மட்டம் குறையும் போது அவற்றை விடுவிப்போம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.




     மேலும் விஸ்வாமித்ரி ஆற்றில் 300 சதுப்புநில முதலைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆற்றின் நீர் மட்டம் அதன் அபாய கட்டமான 37 அடியிலிருந்து 12 அடியாக குறைந்து இன்று காலை 24 அடியாக இருந்தது.

    எவ்வாறாயினும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், முதலைகள் ஆற்றின் பாதுகாப்பான எல்லைகளை விட்டு வெளியேறி, வெள்ளம் நிறைந்த தெருக்களில், நகரின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன, ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    விஸ்வாமித்ரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து முதலைகளை மீட்கும் பணி ஆண்டு முழுவதும் தொடரும். அதே வேளையில், மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கனமழை தொடர்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

    கனமழையை தொடர்ந்து, சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் முதலை வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். கனமழைக்கிடையில் முதலை ஒன்று சாலையில் சகஜமாக வருவதை பார்த்த நபர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் படம்பிடித்த வீடியோவில், சிப்லுன் சாலையில் பெரிய முதலை ஊர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்று இருந்தது. கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள மூன்று முதலை இனங்களில் ஒன்றான குவளை முதலைகளுக்கு பெயர் பெற்றது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 2) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
    • வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.

    இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. #AustraliaFlood
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்வதால் குவின்ஸ் லேன்டில் உள்ள அணை திறந்து விடப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

    அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

    எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. #AustraliaFlood
    மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.

    இங்கு 25 வகை முதலைகளும், ஆமைகள், பாம்புகள் உட்பட 35 வகை ஊர்வன விலங்குகளும் உள்ளன.

    இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பகலில் மட்டும் அணுமதி வழங்கப்பட்டு வந்தது.

    பொதுவாக முதலைகள் இரவில் தான் சுதந்திரமாக உலவுவது வழக்கம். அப்போது முதலைகளின் கண்கள் சிகப்பாக ஒளி வீசுவதை பார்க்கும் போது, அதன் உறுமல் சத்தமும் திரில்-பயம் கலந்த புது அனுபவமாக இருக்கும்.


    முதலைகளை அதன் வசிப்பிடத்தில் இரவில் சென்று பார்க்கும் அனுமதி வெளிநாடுகளில் மட்டும் உண்டு. இந்தியாவில் கிடையாது.

    இந்த நிலையில் முதல் முறையாக வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ரூ.100-ம், பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. #Tamilnews
    ×