search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivating"

    • முதுகுளத்தூரில் யாகம் வளர்த்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அமைந்துள்ள பிரித்தியங்கரா தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் யாகம் வளர்த்து வழிபாடு செய்தனர்.

    இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மிளகாய் வத்தல், வெண்கடுகு, நெய், நல்லெண்ணெய் வழங்கி யாகத்தில் பங்கேற்று தோஷங்கள் நீங்க பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர். 

    ×