என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Customs clearance"
- கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவ தாகவும் கவுன்சிலர்கள் கூறினர். கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டம் திருமங்கலம் பகுதியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.
மேலும் இத்திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அதிகாரிகள் ஜல்ஜீவன் திட்டத்திற்கு போதுமான நிதி இருந்தால் மட்டுமே அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும் என தெரிவித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள அக விலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் முத்துப்பாண்டி பேசினார்.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் செல்வம், மின்னல் கொடி ஆண்டிச்சாமி ஆகியோர் வலியுறுத்தினர்.
அ.தி.மு.க. ஒன்றிய தலைவர் லதா ஜெகன், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் மற்றும் அனைத்து கவுன்சிலர் களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்