search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cybercrime police"

    • கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
    • முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.

    மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.

    இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா?

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் பற்றியும் அவரது மனைவி ராதிகா பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பாக சரத்குமார், ராதிகாவிடம் பேசியதை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதற்கு ராதிகா எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக சரத்குமார் மற்றும் ராதிகா பற்றி அவதூறு கருத்தை கூறியுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கைது நடவடிக்கை பாய் கிறது. அவர் மீது எந்தெந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது பற்றி சட்ட நிபுணர் களின் கருத்தை போலீசார் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
    • என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன், இவரது மனைவி டாக்டர் சரோஜா. அண்ணா நகரில் வசித்து வருகின்றனர்.

    சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று டாக்டர் சரோஜாவின் வங்கி பணத்தை மோசடி செய்ய முயன்றுள்ளது. இதனால் சரோஜாவின் வழக்கறிஞர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    மத்தியப் பிரதேசம் இந்தூர் காவல் நிலைய போலீசார் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்து உள்ளனர். அந்த நபர் உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி உள்ளார்.

    அந்த எண்களை தொடர்பு கொண்ட போது 'உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டு வாயிலாக மும்பையில் செயல்படும் தனியார் வங்கி மேலாளர் சஞ்சய் சிங் என்பவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அது தொடர்பாக உங்களிடம் வீடியோ அழைப்பில் விசாரிக்க வேண்டும் என்று மிரட்டினார்.

    அதன் பிறகு சுனில் குமார் என்ற நபரின் எண்ணில் இருந்து எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அரசு முத்திரையுடன் கைது வாரண்ட், சொத்து முடக்கம், ரகசிய ஒப்பந்தங்கள் என போலி ஆவணங்களை அனுப்பினார்கள்.

    நீங்கள் நிரபராதி என்பதால் உங்களுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி பணம் பறிக்க முயன்றனர். வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டு மிரட்டினார்கள்.

    நான் உடனே தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டேன். என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதன் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு மோசடி கும்பல் சென்னையில் இருந்து கொண்டு இந்தூரில் இருந்து பேசுவது போல் பேசியிருப்பதும் போலி ஆவணங்களை இந்த கும்பலே தயாரித்துள்ளதும் தெரிய வந்தது. எனவே டாக்டர் சரோஜாவிடம் பேசிய அந்த வடநாட்டு கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத் தின் பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 294பி, 354-டி, 506(1), 509 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.

    தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரில் 294-பி, 5061) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னை யில் மட்டும் அவர் மீது நேற்று இரவு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    திருச்சி மாநகரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சேலம் மாநகரில் பணி புரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெண் போலீசார் குறித்து யூ டியூபர் சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசா ரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தை யில் பேசுவது, அரசு ஊழி யரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசு வது, துன்புறுத்தல், கண்ணி யத்தை குலைப்பது ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர், இவருக்கு கடந்த 12-ந்தேதி டெலிகிராம் மூலம் மர்ம நபர் அறிமுகமாகி பேசினார்.

    அப்போது அவர் அனுப்பும் செயலியை பதிவிறக்கி விவரங்களை பூர்த்தி செய்தால் இரட்டிப்பு பணம் பெறலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய அந்த வாலிபர் தனது விவரங்களை தெரிவித்து ரூ.39.38 லட்சத்தை மர்ம நபர் பதிவிட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தார்.

    பணம் சென்றடைந்ததும் மர்ம நபரின் டெலிகிராம் வெப்சைட் லிங்க் அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் குஜராத், அசாம் மாநிலங்களை சேர்ந்த மோசடி கும்பல்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போல போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக அளவில் பகுதிநேர வேலை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது.
    • வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை( பார்ட் டைம் ஜாப்) என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றத

    இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லா மல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடு கின்றனர்.

    இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.

    எனவே இது போன்ற பகுதி நேர வேலை இவை களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதே போல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக எஸ்.எம்.எஸ். இ.மெயில், மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும்.

    அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்.

    மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் (1930) 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும் என்றும்.

    இதேபோல் தேவையில்லாத லிங்க்,வீடியோ கால் போன்றவற்றை தொடவேண்டாம் எனவும் மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
    • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

    எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

    மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

    பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

    எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
    • மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.

    எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

    மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.

    அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.

    இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.

    மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் தான், செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் இருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.

    இது தொடர்பாக டார்லா பிரவீன்குமார், சண்டீபன், ராஜூ, அசோக்குமார், வீரராகவன், பிரவீன்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன் பேரில் அதற்கு உதவிய அசோக் குமார் மற்றும் ராஜூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அசோக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் பேரில் வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற செயலுக்காக பயன் படுத்தப்பட்ட 7 செல்போன் கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    இவர்களின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள்.

    மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்களை மோசடிக் கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்து உள்ளது.

    எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
    • www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    சென்னை:

    ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

    இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.

    ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.

    மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.

    ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-

    தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

    நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.

    ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.

    அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.

    நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

    சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×