search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence production"

    • பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.
    • 2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை வளர்ப்பதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உற்பத்தியின் மதிப்பு 2023-24-ல் ரூ.1,26,887 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் உற்பத்தி மதிப்பை விட 16.8 சதவீதம் அதிகமாகும்.

    பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை உட்பட இந்திய தொழில்துறைக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


    பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். #defenceproduction #NirmalaSitharaman #AeroIndia
    பெங்களூரு:

    பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலங்கா விமானப்படை தளத்தில் ’ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான 12-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியின் முதல்நாளான இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



    இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் என 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.



    2014 முதல் 2018 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 6 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 237 கோடி ரூபாய் முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இந்தியாவில் இந்நிறுவனங்கள் தயாரித்த துப்பாக்கிகள், இலகுரக ஹெலிகாப்டர்கள், ராடார் கருவிகள் உள்ளிட்ட சில தளவாடங்களின் பட்டியலையும் வெளியிட்டார். #defenceproductionlicense #defenceproduction #NirmalaSitharaman #AeroIndia
    ×