search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diagnosis camp"

    • நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் சுகாதாதுறையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு விழிப்பு ணர்வு முகாம் இன்று நடந்தது. முகாமினை நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுப்பாளையம்

    வார்டு பகுதியான ராஜாநகர், முத்தமிழ்நகர், அருந்ததிநகர், அய்யனார்நகர், சஞ்சய்காந்தி நகர் ,சுப்பையா நகர், மங்கலஷ்மி நகர், கண்ணன் நகர், போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற்றனர்.

    முகாமில் புதுவை அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    • யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    வெள்ளகோவில் :

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நேற்று இரவு நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர். மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். உப்புபாளையம் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன்.கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×