search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dietary focus"

    • ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும்.
    • சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன.

    பால், பழம் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்கிறது மருத்துவ உலகம். அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். செரிமானம் மந்தமாக நடக்கும், இந்த கலவை உருவாக்கும் ஒருவித நச்சுத்தன்மை மன நல செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

    பாலையும், வாழைப்பழத்தையும் தனித்தனியாக உட்கொள்வதே சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவிடும் என்கிறார்கள். பால், பழத்தை போலவே சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் சில உங்கள் கவனத்துக்கு...

    உணவு-பழங்கள்

    வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருந்தாலும், பழங்களை உணவோடு சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார், மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராகுல் குரானா.

    பழங்கள் விரைவாக செரிமானமாகிவிடும். ஆனால் தானியங்கள், இறைச்சிகள் மெதுவாக ஜீரணமாகக்கூடியவை. இரண்டும் இணையும்போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாடு ஏற்படும்.

    தன் காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற அசவுகரியங்கள் உண்டாகும். இதனை தடுக்க பழங்களை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு உட்கொள்வது நல்லது.


    தானியங்கள் - ஜூஸ்

    தானியங்களுடன் ஜூஸ் பருகுவதும் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்காது. ஏனெனில் இவை ஒன்று சேரும்போது நீடித்த உடல் ஆற்றலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்காது.

    இந்த கலவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கும், சோர்வுக்கும் வழிவகுக்கும். ஜூஸுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவதும், புரதம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்வதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.


    பர்கர் - பொரித்த பொருட்கள்

    இந்த துரித உணவுகள் ருசியான கலவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிக நேரம் சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அதிக கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட பொருட்களுடன் இணைத்து சாப்பிடுவது செல்களை சேதப்படுத்தும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும்.

    கார்போஹைட்ரேட்டுகள் - தக்காளி

    தக்காளி அமிலத்தன்மை கொண்டது. அதனை அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளுடன் உட்கொள்ளும்போது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த கலவை அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இதனை தவிர்க்க தக்காளியை குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.


    பழம் - யோகர்ட்

    யோகர்ட்டில் இருக்கும் புரோபயாடிக் ஏராளமான நன்மைகளை கொண்டது. அதை பழங்களுடன் இணைப்பது ஒவ்வாமையையும், நெஞ்செரிச்சலையும் அதிகப்படுத்தக்கூடும். சைனஸ், சளி அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் பால் பொருட்களுடன் பழங்களை இணைந்து உட்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.

    வெறுமனே யோகர்ட் உட்கொள்வது அல்லது பால் பொருட்களுக்கு மாற்று உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது இந்த சிக்கல்களை குறைக்க உதவும்.


    தானியங்கள் - பால்

    அரிசி, கோதுமை, கம்பு, ஓட்ஸ், பார்லி, தினை போன்ற தானியங்களுடன் பால் சேர்த்து உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடக்கூடும். உடல் சோர்வுக்கும் வழிவகுக்கும். தானியங்கள் மற்றும் பால் இரண்டிலும் வேகமாக ஜீரணிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

    அவை உடலிலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இவற்றை குறைவாக உட்கொள்வது அல்லது மாற்று பொருட்களை தேர்ந்தெடுப்பது நலம் சேர்க்கும்.


    பீட்சா - சோடா

    இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து செரிமானத்துக்கு அசவுகரியத்தை உண்டாக்கிவிடும். இரண்டிலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

    அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். தண்ணீர் அல்லது ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவிடும்.

    • வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
    • மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்சினையை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

    உணவில் கவனம்

    உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்துவிட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.

    வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்

    வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடை காலம் முடிந்து மாறும் பருவ நிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர்கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும். நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்

    மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும்.

    சுற்றுப்புற தூய்மை

    பருவ நிலை மாறுபாடும், மழை நீர் தேங்குவதும் கொசு உற்பத்திக்கு வித்திடும். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசுக்கள் பரவச் செய்துவிடும். கோடை மழையின்போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.

    தனிப்பட்ட சுகாதாரம்

    வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கை விரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கு இடையே பூஞ்சை தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

    வடிகட்டிய நீரை பருகுங்கள்

    கோடை காலம் முடிவுக்கு வந்து பருவ நிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரையும் மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.

    மழையில் நனையாதீர்கள்

    மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழையில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிற நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    ×