search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dimple"

    • மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது.
    • முலாயம் சிங்கின் மருமகள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் மறைவையொட்டி மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங்கின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் 6,17,625 வாக்குகளை பெற்று பா.ஜனதா வேட்பாளர் ரகுராஜ் சிங்கை 2,88,136 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது இன்று டிம்பிள் யாதவ் எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ×