என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dinner"
- விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர்.
- ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். இப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. காஜல் அகர்வால், மஹத், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.
ஜோ மல்லூரி ஜில்லா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜில்லா படத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது ஜில்லா படப்பிடிப்பில் போது நடிகர் விஜய், மோகன்லால் மற்றும் மோகன்லாலின் குடும்பம் மற்றும் ஜோ மல்லூரியை அவர் வீட்டில் விருந்து சாப்பிட அழைத்துள்ளார். இரவு 7 மணி அளவில் இவர்கள் விஜய் வீட்டிற்கு சென்றடைந்தனர்.
விஜய், விஜயின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இவர்களை அன்பாக வரவேற்த பின் விஜய் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். மோகன்லால் எத்தனை முறை கூறியும் விஜய் அவருடன் உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவர் வந்த விருந்தாளிகளை கவனிப்பதே முக்கியம் என்ற மனநிலையில் இருந்தார். விஜய் அவரின் விருந்தாளியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணமுடையவர். என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
- நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 4
ரவை- 2 ஸ்பூன்
மைதா மாவு- 2 ஸ்பூன்
அரிசி மாவு- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மிளகு- 1 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
கொத்தமல்லி- தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.
அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.
இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.
அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....
குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.
- குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
1. தண்ணீர்:
காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.
2. உடற்பயிற்சி:
தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
3. புரதம்-நார்ச்சத்து:
காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
4. நீர்ச்சத்து:
எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.
5. நீச்சல்:
நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.
6. இரவு உணவு:
கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
7. தூக்கம்:
முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.
- சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
- சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிடலாம்.
இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது. இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.
சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம். இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள ஆறு பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாம்.
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் விருந்தளித்தார்.
- இதில் கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர், பிரதமர் வரவேற்றனர்.
புதுடெல்லி:
ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்தளித்தார்.
சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
- சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
- இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.
சென்னை:
சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.
இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.
இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.
மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்