search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driving Training"

    • கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம்.
    • தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடி.

    தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) மாநில அளவிலான திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கேபி கணேஷ்குமார், கஜக்கூட்டம் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேஎஸ்ஆர்டிசியின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகளை வழங்குகிறது. இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) மற்றும் கனரக மோட்டார் வாகனம் (எச்எம்வி) உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூ.9,000க்கும், இருசக்கர வாகனப் பயிற்சி ரூ.3,500க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கார் மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காம்போ கட்டணமாக ரூ.11,000க்கு பயிற்சி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முயற்சி தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

    கனரக மோட்டார் வாகனம் பயிற்சிக்கு பொதுவாக ரூ. 15,000, இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை, தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு ரூ.6,000 செலவாகும்.

    இதற்கிடையில், டிரைவிங் ஸ்கூல் துறையில் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நுழைவு ஓட்டுநர் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • புதுவை கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிலையங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

    புதுவையிலும் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தோடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளது. இதற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் கம்ப்யூட்டர், சென்சாருடன் இணைந்த இடத்தில் வாகனங்களை ஓட்டி உரிமம் பெற வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல், சிறிய தவறு செய்தாலும் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

    புதுவையில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களும் இதன்கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

    இங்கு கனரக ஓட்டுநர்க ளுக்கு முழுமையான என்ஜின் வாகன பழுது பார்ப்பு பயிற்சியும் அளிக்கப்படும். விரைவில் இடத்தை தேர்வு செய்து ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையத்ததை நிறுவ போக்கு வரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது.

    ×