search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant foot disease"

    • முகாமில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது
    • செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்

    உடன்குடி:

    செட்டியாபத்து ஊராட்சி மன்றபகுதியில் யானைக்கால் நோய் கண்டறியும் சோதனை முகாம் நடந்தது. இதில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் மஞ்சுளா, ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ஆழ்வார், குருசாமி, அந்தோணிராஜ், ராஜகுமார், சுபாஷ், முத்து செல்வன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ரத்த மாதிரி எடுத்துச் சென்றனர்.

    • யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    வெள்ளகோவில் :

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நேற்று இரவு நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர். மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். உப்புபாளையம் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன்.கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×