என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Employes"
- இந்திய உணவு கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் நாகேஷ், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு , இந்திய உணவுக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர்கள் கிருஷ்ணன், முருகேசன், கலியபெருமாள், தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் தியாகராஜன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாவட்ட செயலாளர்கள் சிவகுருநாதன், ஆனந்தன் , புஷ்பநாதன், சம்பத், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்