search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "External Affairs Secretary"

    • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
    • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

    இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும்  மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார். 

    • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.
    • கோவை, மதுரை மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை செயலாளர் அவுசாஃப் சயீத், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்துப் பேசினார்.

    பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சேவைகள், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெளிநாட்டு ஆட்சேர்ப்பில் சட்டவிரோத ஏஜெண்ட்களை தடுப்பது, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், அரபு நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அப்போது, விவாதிக்கப்பட்டது.

    மேலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய தூதரகங்கள், குடியேற்றப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்கான ஆன்லைன் நடைமுறையான அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவுசாஃப் சயீத் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை டாக்டர் அவுசாஃப் சயீத் பார்வையிட்டதுடன், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    ×