search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firecracker Factory Explosion"

    • விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் முதல்வர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50.000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    • பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
    • பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார்.

    இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் மல்லி, மானகசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கினர். முதலில் வெடிமருந்து கலவை பணிகள் நடைபெற்றன.

    இந்த நிலையில் இருந்து பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது. அதனை தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.

    இந்த விபத்தில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாராவது இந்த விபத்தில் சிக்கி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டாசு தயாரிப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவதும் அரங்கேறி வருகிறது.

    இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளாவை சேர்ந்த நடிகரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ்கோபி நேற்று சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் ஆய்வு செய்த மறுநாளே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு என்பதை அறிய முடியாமலேயே விபத்துகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

    பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • விருதுநகரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    • நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
    • விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி தகவல்

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து பற்றி தகவல் அறித்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாகவும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×