search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangajal"

    • பாஜக ஆட்சியில் உலக அதிசயமான தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
    • தாஜ்மஹாலில் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்ததாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது கன்வார் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    தன்னை அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என கூறிக்கொண்ட அவர், "தாஜ்மஹால முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக பெண் எம்.எல்.ஏ சென்று வந்த பின்னர் கோவில் கங்கை நதி நீரால் சுத்தப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில்  உள்ள முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி கடந்த ஜூலை 12-ம் தேதி ஒரு விழாவுக்கு சென்று இருந்தார்.

    பெண் எம்.எல்.ஏ போய் வந்த பிரபல ரிஷி த்ரோம் கோவிலில் பெண்கள் வழிபட தடை உள்ளது. இது தெரியாமல் கட்சி  தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்.எல்.ஏ அங்கு சென்று உள்ளார். மகாபாரத காலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

    இந்த கோவிலில் பெண் பக்தர்கள் நுழைவதற்கு பல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

    கோவிலுக்குள் வந்தபோது, மனிஷா அனுராகி மட்டுமே பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் ஒரு புனிதமான தளம் மீது ஏறி நின்றதாக கூறப்படுகிறது. இது ஒரு புனிதமான இடம் மற்றும் மக்கள் மேடையில் குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தொண்டர்களின் நிர்பந்தததால் அங்கிருந்த பூசாரி சுவாமி தயானந்த் மகந்த் ஒன்றும் கூறவில்லை. மனிஷா அனுராகி வந்து சென்றதில் இருந்து சுத்தம் செய்வதற்காக அந்த கோவில் மூடப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்த மனிஷா அனுராகி குறைந்த சாதியினரே என்று பூசாரி கோபமடைந்தார். 

    மனிஷா அனுராகியின் வருகைக்கு பின் சுவாமி தயானந்த மகந்த், கிராம மக்களும் பஞ்சாயத்து ஒன்றை கூட்டினர். கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் கடவுளின்  கோபத்தை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

    அவரின் விஜயத்தின் பின்னர் ஒரு துளி நீர் மழை பெய்யவில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பஞ்சாயத்து தெய்வங்களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆலயத்தை சுத்தப்படுத்த கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமம் ஆகும் பிரயாக் கொண்டு சென்று சுத்தபடுத்துவது என முடிவுசெய்தனர்.

    அதன்படி கங்கை நீரால் கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்களின் சிலைகள் பிரயாக்கில் சுத்தம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் 'தரிசனம்' செய்வதற்காக இந்த ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள மனிஷா அனுராகி, அங்குள்ள சிலர் மட்டுமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்கள் அரை வேக்காட்டுத்தனமானவர்கள் என பேட்டியளித்துள்ளார்.
    ×