search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ghazipur"

    • லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது.
    • அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

    லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது. இந்திரா நகரில் வசித்து வரும் பாண்டே பல்ராம்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அவர் வாரணாசிக்கு சில வேலை நிமித்தமாக சென்றிருந்தார்.

    அப்போது அவரது வீட்டை நோட்டம் விட்டு திருடன் அவனது கைவரிசையை காட்டலாம் என்று எண்ணி பாண்டேவின் வீட்டை கொள்ளையடிக்க சென்றார். அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பாண்டேவின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்துள்ளன.

    இதனால் சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காஸிபூர் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது, கொள்ளையடிக்க வந்த கபில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் திருட வந்த இடத்திலேயே மயங்கியுள்ளார். அவனை அலேக்காக தூக்கிய போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 379 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது"அலமாரிகள் உடைக்கப்பட்டன. பணம் உட்பட அனைத்தும் எடுக்கப்பட்டன. வாஷ்பேசின், கேஸ் சிலிண்டர் மற்றும் தண்ணீர் பம்ப் ஆகியவற்றையும் திருடன் திருட முயன்றான்" என்று தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi #Congress #Lollipop
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் காஜிப்பூர் பகுதியில் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மகாராஜா சுஹல்டியோவின் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை லாலிபாப்புடன் ஒப்பிட்டு பேசினார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் எனக்கூறி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.



    ஆனால், அங்கு 800 விவசாயிகளின் பயிர்க்கடனை மட்டுமே மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதுபோன்ற லாலிபாப் கம்பெனிகளை நீங்கள் நம்பவேண்டாம். விவசாயிகள் லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரசின் கடுமையான நடவடிக்கைகளால் திருடர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்களின் பரிபூரண ஆசி தொடர்ந்து எனக்கு கிடைத்தால் போதும், அவர்களை சரியான இடத்தில் அடைக்க நடவடிக்கை எடுப்பேன் என குறிப்பிட்டார். #PMModi #Congress #Lollipop
    ×