search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Day Festival"

    • ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.

    பசுமையை போற்றும் வகையில் பசுமை உலக சுற்றுப்புற சூழல் குறித்தும், மழை வளம் வேண்டியும் , புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி கவிதை, கட்டுரை, பாடல்கள் மூலம் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று மரங்கள் குறித்து வரைந்தனர்.

    எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பசுமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை தலைமை யாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பசுமை தின விழா அவசியத்தை விளக்கி கூறினார்.

    வக்கீல் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பசுமை நிற ஆடையையும் மற்றும் அவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பசுமை காய்கறிகளையும் மழலையர்களை பாராட்டினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மழலையர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×