search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HealthTips"

    • அவகேடோ பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன.
    • கீரை, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன.

    இளமை தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். 40 வயதை கடந்த பின்னும் வயதான தோற்றத்திற்குரிய அறிகுறிகள் எட்டிப்பார்க்காமல் இளமை பொலிவோடு ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப அழகு சாதன பொருட்களை உபயோகிக்கிறார்கள்.

    இளமை தோற்றத்திற்கான அடித்தளம் உடலுக்கு எந்த அளவுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஊட்டச்சத்து நிறைந்த அத்தகைய உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறிகளை தடுத்துவிடலாம். சில ஆண்டுகள் கூடுதலாக இளமை தோற்றத்தை பராமரிக்கலாம். அப்படிப்பட்ட உணவுகள் எவை தெரியுமா?

    அவகேடோ:

    அவகேடோ பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறந்தவை. கூடுதலாக கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும் பண்புகளையும், தோல் நெகிழ்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையையும் அவகேடோ கொண்டிருக்கிறது.

    புளூபெர்ரி:

    ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்ட புளூபெர்ரி வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்தது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சி மற்றும் கே, நார்ச்சத்து, மாங்கனீசு போன்றவை செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்த உதவும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    கீரைகள்-பழங்கள்:

    கீரை, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த தோல் செல்களை சரி செய்யவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதனால் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தாமதப்படுத்தவும் செய்கின்றன.

    ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள், புரோக்கோலி, இஞ்சி, லவங்கப்பட்டை உள்ளிட்டவையும் விரைவில் வயதாகும் அறிகுறிகளை விரட்ட உதவிடுகின்றன.

    கிரீன் டீ:

    பாலிபினால்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கிரீன் டீயை தவறாமல் பருகுவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவிடும்.

    பெர்ரி:

    ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பிற பெர்ரி வகை பழங்களிலும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன.

    இந்த பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

     

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

    பீட்டா-கரோட்டின் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளும்போது அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. செல்களை மாற்றுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் இது அவசியமானது. இளமைப் பொலிவைப் பராமரிக்கவும், வறண்ட, மந்தமான சரும நிலையை மாற்றவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துணைபுரியும்.

    நட்ஸ்கள்:

    பாதாம், வால்நட்ஸ், ஆளி மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இளமை சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    தக்காளி:

    தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சுருக்கங்களின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்வது இளமை பொலிவை பராமரிக்க உதவும். புற ஊதா கதிர்வீச்சினால் முன்கூட்டியே வயதாகும் நிலை ஏற்படுவதையும் தடுக்கும் தன்மையும் கொண்டது.

    யோகர்ட்:

    புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் கொண்ட யோகர்ட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தோல் ஆரோக்கியத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த புரோபயாடிக்குகள் இளமை சருமத்தை தக்கவைக்கவும் ஊக்குவிக்கும்.

    கொழுப்பு நிறைந்த மீன்:

    சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோல் நெகிழ்ச்சி தன்மையையும், நீரேற்றத்தையும் பராமரிக்க அவசியமானவை. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகின்றன. 

    • வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம்.
    • பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு.

    அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை மாடுலர் கிச்சன் என்று நவீனமாக அமைப்பதை இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். நீரும், நெருப்பும், உணவுப்பொருளும் புழங்கும் இடம் என்பதால் அங்கு சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம்.

    காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் அனைத்தும் ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை கவர் செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைக்கும்போது கை நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக இருப்பதுடன் அதிக ஆபரணங்கள் இல்லாதிருப்பதும் நல்லது. சமையலறையில் இ-கோலை, சால்மொனெல்லா, காம்பைலோபாக்டர் போன்று பல வித கிருமிகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன.

    அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் சிங்க் ஆகியவற்றில் கிருமிகள் இருக்கலாம். சமையலறை டஸ்ட் பின் வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.

    கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் பாக்டீரியாக்கள் உணவில் பரவுவதை தடுக்கலாம். அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது எப்போதுமே கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எரியும் அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம்.

     

    பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை சிங்க்-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி, காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் கட்டிங் போர்டு பயன்படுத்துவது சுகாதாரம்.

    மார்க்கெட்டிலிருந்து வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில ஆர்கானிக் பொருட்கள் மீது புரூட் பிளை என்ற பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக ஏற்படும். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அறை வெப்பத்தில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைக்கும்போது சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது.
    • இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    ஆஸ்துமா என்பது, பாதிக்கப்பட்டவரின் சுவாசப்பாதைகள் சுருங்கி, வீங்கி, கூடுதல் சளியை உருவாக்கும் ஒரு நிலை. இது சுவாசத்தை கடினமாக்குவதுடன் இருமலையும் ஏற்படுத்துகிறது, மூச்சு விடும்போது ஒரு வித விசில் சத்தம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    காரணங்கள்

    ஆஸ்துமாவுக்கான முக்கிய காரணம் ஒவ்வாமை (அலர்ஜி) ஆகும். ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது. ஒன்று உட்புற ஆஸ்துமா. ஒருவருக்கு மரபணு மூலமாகவோ, பரம்பரை வழியாகவோ ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது உட்புற ஆஸ்துமா (இன்ட்ரின்சிக்) எனப்படுகிறது. இவ்வகையில் ஏற்படும் ஆஸ்துமா, சிறுவயதிலேயே அறிகுறிகளை வெளிப்படுகிறது. இது குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிறது.

    இரண்டாவது புறக்காரணிகளால் (எக்ஸ்டிரின்சிக்) ஏற்படும் ஆஸ்துமா. இது காற்றில் உள்ள தூசிகள், புகை, குளிர்ந்த காற்று, வாசனை திரவியம், குறிப்பிட்ட சில உணவுகள், சிட்ரஸ் பழங்கள், அதிக உணர்ச்சி வசப்படுதல், அதிகமாக உடற்பயிற்சி செய்வது, நுரையீரல் நோய்த் தொற்றுக்கள் போன்ற காரணங்களால் ஆஸ்துமா வருகிறது.

    அறிகுறிகள்

    இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    1) தாளிசாதி சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) சுவாச குடோரி மாத்திரை 1-2 வீதம் சாப்பிட வேண்டும்.

    3) கண்டங்கத்திரி அல்லது தூதுவளை லேகியம் 1-2 கிராம், காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை சாப்பிட்டு பலன் பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன.
    • மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியான சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிட்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது.

    டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன. இவற்றில் டார்க் சாக்லெட்டில் 70-85 சதவிகிதம் கோக்கோ சாலிட்ஸ், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிகக்குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. மில்க் சாக்லெட்டில் 35-55 சதவிகிதம் கொக்கோ சாலிட்ஸ், கொக்கோ வெண்ணெய், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.

    ஒயிட் சாக்லெட்டில் கொக்கோ சாலிட்ஸ் கிடையாது. இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது. இம்மூன்றில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கொக்கோ மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள டார்க் சாக்லெட் ஆகும். இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள பாலிபெனால்ஸ், பிளாவனால்ஸ், தியோபுரோமின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் திறம்பட செயல்பட துணைபுரிகின்றன.

    மேலும் டார்க் சாக்லெட்டில் உள்ள கொக்கோவில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. டார்க் சாக்லெட் சாப்பிடுவதால்- ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, பிரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, செல்களில் ஏற்படும் சேதத்தை தடுத்து முதுமை தோற்றதை தாமதப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் பயமின்றி டார்க் சாக்லெட் அல்லது பாதாம் சாக்லெட் ஆகியவற்றை ஒரு நாளைக்கு 20 கிராம் வரை சாப்பிடலாம். கேரமல் கலந்த சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் பால் சாக்லெட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

    ×