search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heart Attacks"

    • நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
    • நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.

    இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைப்பிடித்தல் பழக்கம், மது அருந்துவது போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.


    யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

    உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.


    இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.

    • ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது.
    • உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

    25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்' (SCAD) என்று பெயர்.

    கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்னையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.

     உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இதற்கான ரிஸ்க் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். உடலின் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி நிகழலாம். இணைப்புத்திசுக்கள் பலவீனமாக இருப்பது என்பது ரத்தக்குழாய்களில் மரபணு தொடர்பாக ஏற்படுகிற ஒரு பிரச்சினை.

    மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசவுகரியத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்சேஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

    பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும், இந்த பிரச்சினை கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.

    ×