search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helicopter Service"

    • காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் சிறப்பு தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.
    • ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக இந்த சேவை தொடங்கப்படுகிறது.

    ஜம்மு:

    காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.

    ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள பவனுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    சிறப்பு தரிசனம் முடித்து, அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.35,000, அடுத்த நாள் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.50,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    இந்நிலையில், மாதா வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாக அலுவக அதிகாரி அன்ஷுல் கர்க் கூறுகையில், ஜூன் 18 முதல் ஜம்மு மற்றும் வைஷ்ணவ தேவி கோவில் இடையே நேரடி ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறோம். தொகுப்பின் ஒரு பகுதியாக பேட்டரி கார் சேவை, முன்னுரிமை தரிசனம், பிரசாத் சேவா மற்றும் பைரோன் கோவிலுக்கு ரோப்வே போன்ற பிற வசதிகள் கிடைக்கும். இந்த தொகுப்பை எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    • கவர்னர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் இருந்தது.
    • விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா கவர்னர் என கூறியபோது ஒரு குழந்தை நம்பவில்லை.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கல்விச் சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ் நர்சீ பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசையை ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    கலந்துரையாடலின் போது கவர்னர் தமிழிசை மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    கவர்னர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் இருந்தது. விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா கவர்னர் என கூறியபோது ஒரு குழந்தை நம்பவில்லை.

    பின்னர் என்னுடன் அந்த குழந்தை புகைப்படம் எடுத்த போது தானும் கவர்னராக வரவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்தது.

    உயர்ப்பதவிக்கு வர கல்வி மற்றும் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். நேர்மையாக உங்கள் பணிகளை செய்யுங்கள்.தானாக பதவி வரும் என தெரிவித்தேன்.

    புதுவையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். புதுவை சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க பேருந்து வசதி, நீர் விளையாட்டுகள், இந்திய பிரெஞ்சு கலாச்சார சுற்றுலா ஏற்படுத்தப்படும். விமானதளத்தை விரிவாக்கம் செய்யவும் இரவு விமான சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதனால் பல மாநிலம், பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள்.டாக்டரான நான் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் என்னால் பார்த்து கொள்ள முடியும். அதேபோல்தான் தெலுங்கானா, புதுவை கவர்னர் பதவிகளை பார்க்கிறேன். இதை கூடுதல் வேலையாக கருதவில்லை. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

    எதையும் சமமாக பார்ப்பேன். நமக்கு வேண்டாதவர்கள் கோபத்தை ஏற்படுத்தினால் அதிக அளவில் சிரிப்பேன். நான் என் நிலையில் இருந்து மாற மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×