search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hijab case"

    • ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
    • மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதாவது, ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    இரு நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, சுதான்ஷூ துலியா ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

    மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கர்நாடகா அரசு கல்வி உரிமையை பறிக்கவில்லை.
    • சீருடையில் மாணவர்கள் வர வேண்டும் என்றுதான் மாநில அரசு கூறுகிறது.

    கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், மாநில அரசு கல்வி உரிமையை பறிக்கவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள சீருடையில் மாணவர்கள் வர வேண்டும் என்றுதான் மாநில அரசு கூறுகிறது. ஹிஜாப் அணிய உங்களுக்கு மத ரீதியில் உரிமை இருக்கலாம். ஆனால் அந்த உரிமையை சீருடை நிச்சயம் அணியவேண்டிய கல்வி நிறுவனங்களுக்குள் கொண்டு வரலாமா?

    ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறையாக இருக்கலாம். நாங்கள் சொல்வது அரசு கல்வி நிறுவனங்களில் நீங்கள் மத ரீதியிலான உடையை அணியலாமா? என்பது தான். இந்திய அரசியலமைப்பு நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்கிறது.

    ஆனால், நீங்கள் மத ரீதியிலான உடை, அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் அணியப்படவேண்டும் என கூறுகிறீர்கள். இது விவாதத்திற்கு உரியது. மாணவிகள் அவர்கள் விருப்பப்படி ஆடை அணிந்து வரலாமா? இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ×