search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL Play offs"

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. லீக் சுற்றை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற பரபரப்பான கட்டத்தில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மே 14 ஆம் தேதி (இன்று) மாலை ஆறு மணிக்கு துவங்குகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். நாளை (மே 15) மாலை 6 மணிக்கு பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் ருபே அல்லாத மற்ற கார்டுகளை பயன்படுத்துவோர் கலந்து கொள்ளலாம்.

    ஐ.பி.எல். 2024 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் மட்டும் டிக்கெட் வாங்கிட முடியும். மே 21 ஆம் தேதி ருபே அல்லாத மற்ற கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். 

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #RajeevShukla
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று மும்பையில் வருகிற 22-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடக்கிறது.



    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக ராஜீவ் சுக்லா ஒரு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருவதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். மைதானம் வந்தும், வீட்டில் டி.வி.யிலும் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டியை ரசித்து வருகிறார்கள். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்டேடியத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் டி.வி.யில் பார்க்கும் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் அடுத்த நாள் காலையில் தங்களது பணிகளை கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே ஒரு மணி நேரம் முன்னதாக தொடங்கினால் அவர்கள் அடுத்த நாள் தங்களது பணிகளை கவனிக்க எளிதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #IPL2018 #RajeevShukla #tamilnews
    ×