search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illegal Migration Act"

    • படகு மூலம் வருபவர்கள் இனிமேல் அடைக்கலாம் கோர முடியாது.
    • விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. "சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023"-ன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

    சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து, அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    ×