search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Meteorological Center"

    • இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும்.
    • கடலில் காற்று பலமாக வீசும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மாக பெய்துள்ளது. பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை திரும்ப பெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன.

    இந்த நிலையில் ஆந்திரா கடற்கரையில் இருந்து தென் கடலோர மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது.

    மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று தென்கடலோர மியான்மர் பகுதியிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டுள்ளது.

    மேலும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது. அது தாமதமாகும் சூழல் நிலவுகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 28-ந் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், கடலில் காற்று பலமாக வீசும் என்றும் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • வடமேற்கு இந்தியா மிகவும் பரவலான லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வளிமண்டல சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த மழையால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய விரிவான முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:-

    வடக்கு வங்கதேசத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வங்கம் முழுவதும் மேற்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இது, மற்ற வளிமண்டல சீர்குலைவுகளுடன் இணைந்து, இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழையை கொண்டு வர வாய்ப்புள்ளது.

    வடமேற்கு இந்தியா மிகவும் பரவலான லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த வாரத்தில் உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மிகக் கனமழை பெய்யக்கூடும்.

    மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழையுடன், மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் ஓரளவு பரவலாக மழை பெய்யும்.

    கொங்கன் மற்றும் கோவாவில் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட மிகக் கனமழை பெய்யக்கூடும். மத்திய மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற முன்னறிவிப்பு இருக்கும்.

    தெற்கு தீபகற்பத்தில், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகளில் பரவலாக மழை பெய்யும். இன்று கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

    அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவில் வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகம் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.

    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     

    இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது. அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வானிலை மைய வட்டார இயக்குனர் குல்தீப் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தானில் இருந்துவீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை முதலில் தாக்குவதால் ஏற்கனவே நகரத்தில் நிலவில் அதீத வெப்பநிலையுடன் வெளியில் இருந்து வரும் இந்த வெப்பக்க காற்றானது இணைந்ததில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

     

    52.3 டிகிரி செல்ஸியஸ் என்பது டெல்லியில் இன்று சராசரியாக கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட 9 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.

    சுமார் 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றத்தின் தாக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஹீட் ஸ்டார்க் உள்ளிட்ட வெப்ப பாதிப்புளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    டெல்லி தவிர்த்து இன்று ராஜஸ்தானில் 51 டிகிரி செல்சியஸும், அரியானாவில் 50.3 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்துக்கு மத்தியிலும் இன்று மாலை வேலையில் டெல்லியின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளனர். 

    ×