search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injuries"

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
    • வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

    தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார். 

    ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

    இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • வாலைக்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையான்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). பால் வண்டி டிரைவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஜோதி (40) என்பவருடன் வீராணம் ஏரியில் மீன்பிடிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது வாலை க்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார். இதில் பாலமுருகனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜோதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது இடியுடன் கனமழை
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்தராபுரத்தை சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள்டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். (வயது 20) செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இவர் பணிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென நித்யாவை மின்னல் தாக்கியது.

    இதில் அதிர்ச்சியடைந்த நித்யா மயங்கி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேகமாக வந்த கார் நிலைதடுமாறி கடையில் மோதியது
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது நிலைதடுமாறி அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி சென்ற ஒரு ஆண் மற்றும் 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடைக்குள் கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கிழங்கு வியாபாரியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை தடாகம் அருகே உள்ள திப்பனூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 72).

    கிழங்கு வியாபாரி. சம்பவத்தன்று இவர் அதிகாலை 3.30 மணியளவில் வியாபாரத்துக்கு செல்வதற்காக கிழங்கை எடுத்துக்கொண்டு மொபட்டில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை கருப்பசாமியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் கருப்பசாமி தலை மற்றும் இடது கையில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காளம்பாளையம் சீலியூர் விநாயகர் கோவில் வீதியைச்சேர்ந்தவர் சின்னச்சாமி.இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 47). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று மருதூர் சந்தைக்கடை தோட்டத்தில் உள்ள சுகந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்டிரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது, சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள உடல் முழுவதும் படுகாயம் அடைந்தார். சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் மருதூர் சந்தைக்கடை தோட்டத்தைச்சேர்ந்த வீரபத்திரசாமி (54), அவரது மனைவி சுகந்தி (47) மீது காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • சாயல்குடி அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • அவரது உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே சாயல்குடி ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நட த்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன. அங்கிருந்த தடயங்களை சேகரித்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து ள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×