search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive surveillance"

    • தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை.
    • மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுகாதார மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல 2 தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்விக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் நிபா வைரஸ் பரவல் நீடிப்பதால் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த கல்லூரிகள் கேரளாவுக்கான கல்வி சுற்றுலாவை ரத்து செய்து விட்டன.

    கோவையின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.

    அந்த அறிவிப்பில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவ-மாணவிகளை கேரளாவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது.

    • நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
    • தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட

    நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

    நோய் அறிகுறிகள்

    கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தடுக்கும் முறைகள்

    1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

    2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

    5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.

    எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி போன்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீ சார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுவிலக்கு அமலாக்க துறை டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடைகளை சோத னையிட்டனர். ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இரவு முதல் காலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. வெளியூர் ஊரிலிருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மூலப்பட்டறை, பஸ் நிலையம், வீரப்பன்ச த்திரம் போன்ற பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது.

    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, சத்தியம ங்கலம், பெருந்துறை, மொட க்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடந்த சோதனை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    • தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
    • தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் தான். தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    ஜவுளி கடைகளில் கூட்டம்

    தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    அலுவலக வேலைக்கு செல்பவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு, குறு நிறுவனங்களில் தொழில் செய்பவர்களுக்கு 1-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 1-ந் தேதி முதல் ஜவுளி எடுக்க வருபவரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    விற்பனைக்கு குவிப்பு

    பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை உள்ளிட்டவைகள் சூரத்தில் இருந்தும், வேஷ்டி, துண்டு, டவல், பனியன், ஜட்டி உள்ளிட்டவை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டு சேலை ரகங்கள் காஞ்சிபுரம் திருப்புவனத்தில் இருந்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

    இனிவரும் நாட்களில் தீபாவளி விற்பனை களை கட்டுமென்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கடை உரிமையாளர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதே போல தீபாவளி ஜவுளி விற்பனை ஒட்டி சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் 500 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    10 கோபுரங்கள்

    கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (5-ந் தேதி) முதல் தீபாவளி பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல் படையை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் ஸ்பீக்கர் செட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைத்து அளித்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.
    • பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளன.தமிழக எல்லை ப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளது. அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இரு மாநில சுகாதார துறையினரும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி கொரோனா நோயாளி களின் தகவ ல்களை பரிமாறி வருகின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தமிழக -கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி கள் கூறுகையில், கேரளா வில் இருந்து அறிகுறி களுடன் வருவோர் குறித்த தகவல்கள் பெற ப்பட்டு, அவர்கள் தனிமை ப்படு த்தப்படுகி ன்றனர்.பரிசோ தனைகளும் மேற்கொ ள்ளப்படுகின்றன என்றார். 

    ×