search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagan Mohan"

    • சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வருகிறது.
    • ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜென் மோகன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் தான் இந்த தவறு அரங்கேறியது என ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வருகிறது.

    இதனை அம்மாநில முன்னாள் முதல்வர் ஜென் மோகன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் ஜென் மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜென் மோகன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதேடு, வீட்டின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், அம்மாநில முன்னாள் முதல்வர் வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில், வீட்டின் பாதுகாவலர் அறையின் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் மட்டுமின்றி ஜெகன் மோகன் வீட்டு சுவர்களில் காவி வண்ணங்களை பூசியுள்ளனர்.

    • நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை.
    • மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.எத்தனை சர்வே முடிவுகள் என்ன சொன்னாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வைத்தும், நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனவும் பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் இரவு 9 மணி வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

    இதுபோன்ற நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை. சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற நினைக்கிறார்.

    ஆனால் மக்கள் ஜெகன்மோகன் முதல் மந்திரியாக வேண்டும் என்ற உறுதியுடன் வாக்களித்துள்ளனர். யார் என்ன செய்தாலும் மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார். எனவே அவரே மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட் பிடிப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கற்றுக்கொடுத்தார்.
    • இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    அமராவதி:

    ஆந்திரா அரசின் சார்பில் ஆடுவோம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் தொடக்க நிகழ்ச்சி குண்டூரில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இருவரும் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.

    இதையடுத்து, கிரிக்கெட் பந்தை அடித்து ஆடினார் ரோஜா. தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா அவரையும் விளையாடச் செய்தார்.

    இந்தப் போட்டிகள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×