என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Job Opportunity Office
நீங்கள் தேடியது "Job Opportunity Office"
வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை புது விளாங்குடி சத்குருநாத் நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் கூடல்புதூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசியதாக கூறிய மர்ம நபர், பழங்காநத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிரேடு-1 பணியிடம் காலியாக உள்ளது.
இந்த பணியிடத்திற்காக உங்களது வேலை வாய்ப்பு பதிவைஅனுப்ப ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என கூறினார்.
மேலும் அந்த பணத்தை அழகுராஜா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி நான் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு பல தவணைகளில் மொத்தமாக ரூ.75 ஆயிரத்து 600 வாங்கி விட்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.
இதனைத்தொடர்ந்து பழங்காநத்தம் சென்று விசாரித்த போது அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என தெரியவந்தது.
மேலும் என்னிடம் போனில் பேசியவர் சரவணன் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணன், அழகுராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
மதுரை புது விளாங்குடி சத்குருநாத் நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் கூடல்புதூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசியதாக கூறிய மர்ம நபர், பழங்காநத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிரேடு-1 பணியிடம் காலியாக உள்ளது.
இந்த பணியிடத்திற்காக உங்களது வேலை வாய்ப்பு பதிவைஅனுப்ப ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என கூறினார்.
மேலும் அந்த பணத்தை அழகுராஜா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி நான் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு பல தவணைகளில் மொத்தமாக ரூ.75 ஆயிரத்து 600 வாங்கி விட்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.
இதனைத்தொடர்ந்து பழங்காநத்தம் சென்று விசாரித்த போது அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என தெரியவந்தது.
மேலும் என்னிடம் போனில் பேசியவர் சரவணன் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணன், அழகுராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X