என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kanyakumari temple"
- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பதிவு மற்றும் புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத்குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
- முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார்.
கன்னியாகுமரி:
மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் இன்று அதிகாலையில் தனது மனைவியுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு உள்ள ஸ்ரீகாலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன்சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார். பின்னர் அங்கு இருந்து கார் மூலம் கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமன பகுதி கடற்கரையினை சுற்றிப்பார்த்தார்.
அப்போது பா.ஜ.க. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் உடன் இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்