search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "London Mayor election"

    • 63 வயதான தருண் குலாடி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு குலாடி முன்னுரிமை அளிக்கிறார்

    அடுத்த வருடம் மே 2 அன்று, இங்கிலாந்து தலைநகரம் லண்டன் நகரில் அந்நகர மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்தின் லேபர் கட்சியின் சார்பில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாதிக் கான் தற்போது மேயர் பதவியில் உள்ளார்.

    அடுத்த வருட தேர்தலில் போட்டியிட விரும்புவதாக 20 வருடங்களுக்கு மேல் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயதாகும் தொழிலதிபர் தருண் குலாடி அறிவித்துள்ளார்.

    தனது விருப்பத்தை கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போதே அறிவித்திருந்த குலாடி, லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், லண்டன் உலகின் முன்னணி நகரமாக தொடர்வதை உறுதி செய்யவும், அங்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேயர் தேர்தலில் வென்றால் தான் செயல்படுத்த விரும்புவதாக குலாடி பல திட்டங்களை அறிவித்தார்.

    அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    லண்டனில் வாழ்கின்ற குறைந்த வருமான வசதி மற்றும் நடுத்தர வசதி மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்படும். லண்டன் நகரில் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து வாழ்வதால் இங்கு வாழும் மக்களின் தாயக நாடுகளுக்கு இடையே ஒரு ஆக்கபூர்வமான இணைப்பு உருவாக்கப்படும். நகர வளர்ச்சிக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்படும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் "தூய்மை பகுதி கட்டுப்பாடுகள்", "குறைவான வாகன போக்குவரத்து பகுதி", வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள் ஆகியவை நீக்கப்படும். குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அதிகளவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சிக்கன விலையில் வீட்டுவசதி மக்களுக்கு கிடைக்க செய்வது முக்கியமாக பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு குலாடி அறிவித்துள்ளார்.

    குலாடியை தவிர சூசன் ஹில், ராப் ப்ளாக்கி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

    ×