search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Sangadahara Chaturthi"

    • விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
    • மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். அதன்டி இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    கோவிலில் வெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கூட்ட நெரிச்சலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்படட்டது.

    ஜப்பான் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக குழுவினர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருவர். 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மீக குழுவினர் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    ஜப்பான் நாட்டு குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது. 

    • வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
    • விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.

    இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

    ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.

    புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.

    இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

    பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.


    இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

    விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

    அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

    இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

    ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


    அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


    இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.

    • வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
    • மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். இந்த பூஜை விரதம் இருந்து செய்வது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.

    இதற்கு நமக்கு 11 அகல் விளக்குகள் தேவை. இதற்கு புதிதாக வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் பழைய அகலையே கூட தேய்த்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளலாம். அடுத்து 11 அரச இலை அல்லது வெற்றிலை இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    அதேபோல் விநாயகருக்கு பிடித்தமான நைவேதியம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கான நேரமும் மிகவும் முக்கியம். இதை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, அல்லது 8.15-ல் இருந்து 9.15 வரையும், காலை 10.45 முதல் 11.45 வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 வரையும் இந்த நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த பூஜை செய்து கொள்ளுங்கள்.

    இந்த பூஜை செய்ய நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 இலையும் 11 அகல் விளக்கையும் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல அனைத்து அகலையும் வெற்றிலை அல்லது அரச இலை மேல் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைத்து விடுங்கள்.

    வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு பிடித்த நைவேதியத்தை வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் என சகலமும் வைத்து பூஜையை உங்களால் முடிந்த வரையில் சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

    ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திஹி ப்ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை செய்யும் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.

    • குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
    • சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.

    இன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது தோஷம், சந்திர தோஷம் நீங்கும்.

    சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய அருள் வளர்ந்தது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபடலாம்.

    விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.

    "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண

    கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல

    சித்திகராய ஸர்வஜன வசீகரணாய

    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்

    கணபதயே ஸ்வாஹா."

    இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது என எந்த சுப காரியம் தொடங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து சுபகாரியங்கள் நிகழும்.

    ×