search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matrimony"

    • டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
    • இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும்.
    • 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.

    களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா, எந்தத் திசை, கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திசையில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மணமகன் திசை குறித்து குறிப்பு இல்லை. இது ஓரளவுக்கு ஒத்துவரும்.

    களத்ரதோஷம்:

    1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .

    2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.

    3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு

    4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம். களத்ர தோஷம் ஏற்படக் காரணம்:

    1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.

    2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.

    3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.

    4. லக்னத்தில் இருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

    5. லக்னத்தில் இருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.

    6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.

    7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராகு அல்லது கேது இருத்தல்.

    களத்ர தோஷ பரிகாரங்கள் :

    `பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம். இது பழமொழி. பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல், கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா? இதுபோல், திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியவைகளை வணங்காமல், தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி, காளகஸ்தி, சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம்?

    எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி, கௌரி பூஜைகள் செய்யலாம்.

    தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.

    • மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை இளம்பெண் தேர்வு செய்துள்ளார்.
    • பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண் தற்போது வேலைக்கு எதுவும் செல்லவில்லை. அவர் மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை தேர்வு செய்துள்ளார்.

    மேலும் மேட்ரிமோனி மூலம் அவர் தேர்வு செய்த 14 பேரின் வயது மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் பட்டியலிட்டு அவர்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும், அந்த நபரை தேர்வு செய்ய உதவுமாறு குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், அந்த பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களை விட “டேட்டிங்” செல்ல ஜோடியை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. #Matrimony #OnlineDating
    பெங்களூரு:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் “டேட்டிங்” தொடர்பான வெப்சைட்டுகளில் தகவல்களை தேடிப்பார்த்துள்ளனர்.

    இதே காலக்கட்டத்தில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

    எவ்வளவு பேர் “டேட்டிங்” தகவல்களை தேடிப்பார்த்தனர் என்ற எண்ணிக்கையை “கூகுள்” தெரிவிக்கவில்லை என்றாலும் திருமண வரன் தேடுபவர்களை விட “டேட்டிங்” செல்ல ஜோடியை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் “பாரத் மேட்ரிமோனி” வெப்சைட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜோடியை தேடிய 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர்.

    இதில் 24 சதவீதம் பேர் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்புவதாகவும், 21 சதவீதம் பேர் ரொமான்டிக் டின்னருடன் காதலை வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    34 சதவீதம் பேர் பரிசுகள் கொடுத்தும், 15 சதவீதம் பேர் விடுமுறை திட்டமிடல் மூலமும் காதலை சொல்ல விரும்புவதாக கூறி உள்ளனர்.

    ஆய்வில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 86 சதவீதம் பேர் திருமணத்துக்கு பின்புதான் காதலர் தினத்தை கொண்டாட விரும்புவதாக கூறி உள்ளனர்.

    இதே போல ஆன்லைனில் உணவு தொடர்பான தகவல்களை தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2018-ம் ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. #Matrimony #OnlineDating
    ×