search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Microplastics"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும்
    • 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன

    உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. இந்தியாவில் விற்பனையாகும் அத்தகு உப்பிலும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

     

    தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

    ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன.  இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன. 

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
    • பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

    மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து உலகம் மாசுபாட்டை எதிர்கொள்கிறது.

    இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதை குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ×