search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "modernization"

    • 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.
    • தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னையின் 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால், எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு அடுத்த படியாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படத் தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரெயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது.

    அந்த அளவிற்கு தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

    ஆனால் சென்ட்ரல், எழும்பூர் போல தாம்பரம் ரெயில் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த நிலையில், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.1000 கோடி செலவில் உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், இந்த ரெயில் நிலையத்தில் கழிவ றைகள், டிஜிட்டல் பல கைகள், எஸ்க லேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜி.எஸ்.டி. சாலை என இருபக்கமும் பிர மாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரெயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது.

    மேலும் பசுமை பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளது. ரெயில் நிலையத்தில் 6 அடுக்கு கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதியும் அமைக்கப்படுகிறது.

    இந்த திட்டம் 5 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    • சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.
    • புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலை–மையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். சிந்தன் ஷிவிர் என்ற பெயரில் ஹரியானாவின் சூரஜ்குந்த் என்ற இடத்தில் மாநாடு தொடங்கியது.

    மாநாட்டில் மாநில உள்துறை செயலர்கள், டி.ஜி.பி.க்கள், ஆயுதப்படை இயக்குனர்கள், மத்திய போலீஸ் அமைப்புகளும் பங்கேற்றனர். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜீவ்வர்மா,டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோர் பங்கேற்ற–னர். தொடங்கிய மாநாட்டில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தி–யதாவது:-

    புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்க மத்திய உள்துறை அனுமதி வழங்க வேண்டும். புதுவையின் 4 பிராந்தி–யங்க–ளும் கடலோர பகுதியை உள்ளடக்கியவை.

    எனவே புதுவை மாநில கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை மாநில கடலோர காவல்படையை விரிவுபடுத்த வேண்டும். கடலோர காவல்படையில் ஊர்க்காவல்படையினரை நியமிக்க வேண்டும்.

    போதை கடத்தல் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. புதுவையில் போதை தடுப்பு தனி பிரிவை பலப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன கருவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    2-ம் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி, வீடியோ கான்ப–ரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.

    ×